கைவேல் களிற்றொடு போக்கி – குறள்: 774

Thiruvalluvar

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.
– குறள்: 774

– அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள்



கலைஞர் உரை

கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில்
போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாய்ந்திருப்பது கண்டு மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தன் கையிலிருந்த வேலைத் தன்மேல் வந்த போர்யானையைக் கொல்லுமாறு எறிந்துவிட்டு, அடுத்து வந்த வேறொரு போர் யானையைக் கொல்ல வேல் தேடித் திரும்பி வருகின்ற யானை கொல்லி மறவன்; தன் மார்பில் தைத்திருந்த வேலைக்கண்டு பறித்து மகிழ்ச்சியடைவான்.



மு. வரதராசனார் உரை

கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில்பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.



G.U. Pope’s Translation

At elephant he hurls the dart in hand; for weapon pressed, He laughs and plucks the javelin from his wounded breast.

 – Thirukkural: 774, Military Spirit, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.