ஒருவன் அறிவானும் எல்லாம் – நான்மணிக்கடிகை: 104

ஒருவன் அறிவானும் எல்லாம்

நான்மணிக்கடிகை – 104 – விளம்பி நாகனார்

ஒருவன் அறிவானும் எல்லாம் யாதுஒன்றும்
ஒருவன் அறியா தவனும் ஒருவன்
குணன் அடங்கக் குற்றம் உளானும் ஒருவன்
கணன் அடங்கக் கற்றானும் இல்.



விளக்கம்

எல்லாக் கலைகளையும் தெரிந்தவன் ஒருவனும் இல்லை; ஒரு சிறிதும், தெரியாதவன் ஒருவனும் இல்லை; ஒரு நல்லியல்பும் இல்லாமல் பிழையே உள்ளவன் ஒருவனும் இல்லை; அறியாமை சிறிதும் இல்லாமல் கற்றறிந்தவனும் இல்லை.

அதாவது,

  • எல்லாம் அறிந்தவனும் யாரும் இல்லை;
  • ஒன்றும் அறியாதவனும் யாரும் இல்லை;
  • குற்றம் மட்டுமே உள்ளவனும் யாரும் இல்லை;
  • அறியாமை அறவே இல்லாதவனும் யாரும் இல்லை.


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.