அறிவினான் ஆகுவது உண்டோ
திருக்குறள்

அறிவினான் ஆகுவது உண்டோ – குறள்: 315

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்தம்நோய்போல் போற்றாக் கடை. – குறள்: 315 – அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம் கலைஞர் உரை பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

தீயவை தீய பயத்தலால்
திருக்குறள்

தீயவை தீய பயத்தலால் – குறள்: 202

தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும். – குறள்: 202 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

ஊருணி நீர்நிறைந்து அற்றே
திருக்குறள்

ஊருணி நீர்நிறைந்து அற்றே – குறள்: 215

ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகுஅவாம்பேர் அறிவாளன் திரு. – குறள்: 215 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

மன்உயிர் ஓம்பி அருள்ஆள்வாற்கு
திருக்குறள்

மன்உயிர் ஓம்பி அருள்ஆள்வாற்கு – குறள்: 244

மன்உயிர் ஓம்பி அருள்ஆள்வாற்கு இல்என்பதன்உயிர் அஞ்சும் வினை. – குறள்: 244 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை எல்லா உயிர்களிடத்தும் கருணைகொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைக் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

செல்லா இடத்துச் சினம்தீது
திருக்குறள்

செல்லா இடத்துச் சினம்தீது – குறள்: 302

செல்லா இடத்துச் சினம்தீது செல்இடத்தும்இல்அதனின் தீய பிற. – குறள்: 302 – அதிகாரம்: வெகுளாமை, பால்: அறம் கலைஞர் உரை வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதை விடக் கேடு வேறொன்றுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனது சினம் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை – குறள்: 300

யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்துஒன்றும்வாய்மையின் நல்ல பிற. – குறள்: 300 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும் ஞா. தேவநேயப் பாவாணர் உரை யாம் உண்மையான அறங்களாகக் கண்டவற்றுள்; எவ்வகையிலும்; [ மேலும் படிக்க …]

அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை
திருக்குறள்

அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை – குறள்: 78

அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்வற்றல் மரம்தளிர்த்து அற்று. – குறள்: 78 – அதிகாரம்: அன்புடைமை, பால்: அறம் கலைஞர் உரை மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலை வானத்தில்பட்டமரம் தளிர்த்தது போன்றது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை உள்ளத்தில் அன்பில்லாத வுயிர் இல்லற வாழ்க்கை நடாத்துதல்,பாலை நிலத்தின் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இருபுனலும் வாய்ந்த மலையும் – குறள்: 737

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்வல்அரணும் நாட்டிற்கு உறுப்பு. – குறள்: 737 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை ஆறு, கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத்தொடரும், வருபுனலாம் மழையும், வலிமைமிகு அரணும், ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்
திருக்குறள்

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் – குறள்: 15

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை. – குறள்: 15 – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும்,பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

ஏரின் உழாஅர் உழவர்
திருக்குறள்

ஏரின் உழாஅர் உழவர் – குறள்: 14

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளம் குன்றிக்கால். – குறள்: 14 – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மழையென்னும் வருவாய் வரவற்றுவிடின்; உலகத்திற்கு ஆணியாகிய [ மேலும் படிக்க …]