Thiruvalluvar
திருக்குறள்

வேலொடு நின்றான் இடுஎன் – குறள்: 552

வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்கோலொடு நின்றான் இரவு. – குறள்: 552 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை கொலைவரைத் தண்டிக்கும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கொலைமேற்கொண் டாரின் கொடிதே – குறள்: 551

கொலைமேற்கொண் டாரின் கொடிதே அலைமேற்கொண்டுஅல்லவை செய்துஒழுகும் வேந்து. – குறள்: 551 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத்தொழிலகாக் கொண்டவரைவிடக் கொடியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அலை மேற்கொண்டு அல்லவை செய்து ஒழுகும் . பொருளாசையாற் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை – குறள்: 556

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதுஇன்றேல்மன்னாவாம் மன்னர்க்கு ஒளி. – குறள்: 556 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை நீதிநெறி தவறாத செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும்.இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசர்க்குப் புகழ் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் – குறள்: 550

கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்களைகட் டதனொடு நேர். – குறள்: 550 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசுதண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் கொடியவரைக் கொலையால் தண்டித்து [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குடிபுறம் காத்துஓம்பி குற்றம் – குறள்: 549

குடிபுறம் காத்துஓம்பி குற்றம் கடிதல்வடுஅன்று வேந்தன் தொழில். – குறள்: 549 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள்யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்குடிகளைப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எண்பதத்தான் ஓரா முறைசெய்ய – குறள்: 548

எண்பதத்தான் ஓரா முறைசெய்ய மன்னவன்தண்பதத்தான் தானே கெடும். – குறள்: 548 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை முறை ( நியாயம் ) [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இறைகாக்கும் வையகம் எல்லாம் – குறள்: 547

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனைமுறைகாக்கும் முட்டாச் செயின். – குறள்: 547 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியேகாப்பாற்றும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உலகம் முழுவதையும் அரசன் காப்பான் ;முட்டுப்பாடு நேர்ந்த [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வேல்அன்று வென்றி தருவது – குறள்: 546

வேல்அன்று வென்றி தருவது மன்னவன்கோல்அதூஉம் கோடாது எனின். – குறள்: 542 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல;குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசனுக்குப் போரின்கண் வெற்றியைக் கொடுப்பது வேற்படையன்று [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் – குறள்: 545

இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்டபெயலும் விளையுளும் தொக்கு. – குறள்: 545 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது,பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பருவமழையும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில – குறள்: 544

குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன்அடிதழீஇ நிற்கும் உலகு. – குறள்: 544 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன் குடிகளை அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்தும் [ மேலும் படிக்க …]