குருவிரொட்டி இணைய இதழ்

பள்ளி எழுச்சி  (பெண்)  – இன்னும் தூக்கமா பாப்பா – பாரதிதாசன் கவிதை

பள்ளி எழுச்சி  (பெண்)  – பாரதிதாசன் கவிதை

இன்னந் தூக்கமா? பாப்பா
இன்னந் தூக்கமா?

பொன்னைப் போல வெய்யிலும் வந்தது
பூத்த பூவும் நிறம்கு றைந்தது

உன்னால் தோசை ஆறிப் போனதே
ஒழுங்கெல்லாமே மாறிப் போனதே

 

இன்னந் தூக்கமா? பாப்பா
இன்னந் தூக்கமா?

 

காலைக் கடனை முடிக்க வேண்டும்
கடியக் கொஞ்சம் படிக்க வேண்டும்

நீலக் கூந்தல் வார வேண்டும்
நினைத்தது போல் உடுத்த வேண்டும்

இன்னந் தூக்கமா? பாப்பா
இன்னந் தூக்கமா?

 

நேரத் தோடு போகின்றார்
நிறையப் பெண்கள் தெருவில் பார்
காரியத்தில் கண்ணாயிரு
கைகாரப்பெண்ணாயிரு

இன்னந் தூக்கமா? பாப்பா
இன்னந் தூக்கமா?