குருவிரொட்டி இணைய இதழ்

உள்ளியது எல்லாம் உடன்எய்தும் – குறள்: 309

 

உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.      – குறள்: 309

                           – அதிகாரம்: வெகுளாமை, பால்: அறம் 

கலைஞர் உரை

ஒருவன் உள்ளத்தால் சினம் கொள்ளாதவனாக இருந்தால், எண்ணியவற்றையெல்லாம் அவன் உடனடியாகப் பெறுவான்.

மு. வரதராசனார் உரை

ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.