குருவிரொட்டி இணைய இதழ்

தாம் இன்புறுவது உலகுஇன்புற – குறள்: 399

தாம்இன் புறுவது உலகுஇன்புறக் கண்டு
காமுறுவர் கற்றுஅறிந் தார்.          – குறள்: 399

                            – அதிகாரம்: கல்வி; பால்: பொருள்

விளக்கம்: 

தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.