குருவிரொட்டி இணைய இதழ்

முத்தமிழ் – பாரதிதாசன் கவிதை



முத்தமிழ் – பாரதிதாசன் கவிதை

படிப்பும் பேச்சும் இயற்றமிழ்
பாடும் பாட்டே இசைத்தமிழ்
நடிப்பும் கூத்தும் சேர்ந்ததே
நாடகத் தமிழ் என்பார்கள்
முடிக்கும் மூன்றும் முத்தமிழே
முத்தமிழ் என்பது புத்தமுதே
முடித்த வண்ணம் நம் தமிழே
முத்தமிழ் என்றே சொல்வார்கள்.