குருவிரொட்டி இணைய இதழ்

துறந்தாரின் தூய்மை உடையர் – குறள்: 159


துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.

– குறள்: 159

– அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம்



கலைஞர் உரை

எல்லை கடந்து நடந்துகொள்பவர்களின் கொடிய சொற்களைப்
பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நெறி கடந்த கீழ் மக்களின் வாயினின்று வரும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றலுடைய மேன்மக்கள்; இல்லறத்தின் கண் நின்றாலும் துறவியர் போல மனத் தூய்மையுடையராவர்.



மு. வரதராசனார் உரை

வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ் சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.



G.U. Pope’s Translation

They who transgressors’ evil words endure
With patience, are as stern ascetics pure.

 – Thirukkural: 159, The Possession of Patience, Forbearance, Virtues