குருவிரொட்டி இணைய இதழ்

கல்லாத மேற்கொண்டு ஒழுகல் – குறள்: 845

கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடுஅற
வல்லதூஉம் ஐயம் தரும்.    – குறள்: 845

        – அதிகாரம்: புல்லறிவான்மை, பால்: பொருள்



விளக்கம்

அறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக  இருக்கிறாரோ, அதைப்  பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும்.