குருவிரொட்டி இணைய இதழ்

கள் உண்ணாப் போழ்தில் களித்தானை – குறள்: 930


கள்உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
குறள்: 930

– அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள்.



கலைஞர் உரை

ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

கள்ளுண்பா னொருவன் தான் அதை உண்ணாது தெளிந்திருக்கும் வேளையில்; கள்ளுண்டு வெறித்த பிறனைக்காணும்போது; தான் உண்டபொழுது தனக்கிருந்த மயக்கத்தையும் உவமையளவையாலறிந்து, அதுவும் இத்தகையதே யென்று கருதான் போலும்.



மு. வரதராசனார் உரை

ஒருவன் தான் கள் உண்ணாதபோது கள்ளுண்டு மயங்கினவனைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ?



G.U. Pope’s Translation

When one, in sober interval a drunken man espies, Does he not think, ‘Such is my folly in my revelries’?

Thirukkural: 930, Not Drinking Palm – Wine, Wealth.