குருவிரொட்டி இணைய இதழ்

இனிய உளவாக இன்னாத கூறல் – குறள்: 100

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.   – குறள்: 100

            – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம்

விளக்கம்:

இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது, கனிகளை ஒதுக்கி விட்டுக்   காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.