குருவிரொட்டி இணைய இதழ்

வெண் பொங்கல் போன்ற உணவுகளை சாப்பிட்ட பிறகு தூக்கம் வருவது ஏன்?

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link
வெண்பொங்கல்

வெண் பொங்கல் போன்ற உணவுகளை சாப்பிட்ட பிறகு தூக்கம் வருவது ஏன்?

பொதுவாகவே, அதிகமாக உண்ட பிறகு, தூக்கம் வருவது போல் இருப்பது இயல்பு. அதிலும் வெண்பொங்கல், தயிர் சோறு போன்ற சில உணவு வகைகளை உண்டவுடன் நமக்கு உடனே தூக்கம் வருவது போல் இருக்கும்.

வெண்பொங்கல் என்றவுடனே பச்சரிசி, பாசிப்பருப்பு, முந்திரிப்பருப்பு, மிளகு, அனைத்தும் கலந்த நறுமணம் மிக்க சூடான நெய்ப்பொங்கல் நம் நினைவுக்கு வந்துவிடும். மேலும், அதனுடன் கத்தரிக்காய் சாம்பார், தேங்காய்ச் சட்னி, உளுந்து வடை (மெதுவடை) இவற்றையும் சேர்த்துக் கொடுத்தால், அது, காலைச் சிற்றுண்டி என்பதையும் மறந்து நாம் ஒரு பிடி பிடித்துவிடுவோம்.

அதை உண்ட பின்பு, நம் அலுவல் வேலையைத் தொடங்கினால், நம்மை அறியாமல் தூக்கம் வந்து நம் வேலையைக் கொஞ்சம் மெதுவாகச் செய்து கொண்டு இருப்போம்.

வெண் பொங்கல், தயிர் சோறு போன்ற உணவுகளை சாப்பிட்ட பிறகு தூக்கம் வருவது ஒரு சாதாரண நிலையாகும். ஆனால், நம்மில் பலருக்கு ஏன் இப்படி நிகழ்கிறது என்று வியப்பாக இருக்கும். இதற்கு பல அறிவியல் காரணங்கள் உள்ளன:

1. அதிக கார்போஹைட்ரேட் உள்ளடக்கம்

2. செரித்தல்

3. டிரிப்டோபன் அமினோ அமிலம்

4. வெண்பொங்கலின் மிதமான வெப்பம் மற்றும் அதன் மென்மையான, இதமான தன்மை

5. அதிகமாக உணவு உண்ணுதல்

உணவு உண்டதும் ஏற்படும் தூக்கத்தை தவிர்க்க சில வழிகள்:

அற்றால் அளவுஅறிந்து உண்க; அஃதுஉடம்பு
பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு.    – குறள்: 943

                                                   – அதிகாரம்: மருந்து, பால்: பொருள்

விளக்கம்:

உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது, நீண்டநாள் வாழ்வதற்கு வழியாகும்.