குருவிரொட்டி இணைய இதழ்

மண்வாசனை எப்படி உருவாகிறது?

மழையின் போது மண்வாசனை (Sweet Smell of Soil) எப்படி உருவாகிறது?

நீண்ட நாட்கள் வறட்சிக்குப் பின், திடீரெனெ வறண்ட நிலத்தில் புது மழை பெய்யும் போது தோன்றும் மனம் மயக்கும் மண்வாசனையை (Sweet Smell of Soil) விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது! சரி! அந்த வாசனையில் சில நிமிடங்கள் மெய் மறக்கும் நீங்கள், எப்போதாவது அது எப்படித் தோன்றுகிறது என்று நினைத்ததுண்டா? இந்தக் கேள்வி நம்மில் பலருக்குத் தோன்றி இருக்கும்! அதற்கான விடையை இந்த ஏன்-எப்படி? பகுதியில் இப்போது தெரிந்து கொள்வோம்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அறிவியலாளர்கள் இசபெல் ஜாய் பேர் (Isabel Joy Bear) மற்றும் ஆர்.ஜி. தாமஸ் (R.G. Thomas), வறட்சிக்குப் பின் வரும் புது மழையில் தோன்றும் மண்வாசனையைப் பற்றி ஆராய்ச்சி செய்தபோது, இந்த வாசனைக்குப் பெட்ரிக்கார் (Petrichor) எனப் பெயரிட்டனர். மண்வாசனை, மூன்று விதமான காரணங்களால் உருவாகிறது;