குருவிரொட்டி இணைய இதழ்

வகைஅறிந்து தற்செய்து தற்காப்ப – குறள்: 878


வகைஅறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.
குறள்: 878

– அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள்.



கலைஞர் உரை

வழிவகை உணர்ந்து, தன்னையும் வலிமைப்படுத்திக் கொண்டு,
தற்காப்பும் தேடிக் கொண்டவரின் முன்னால் பகையின் ஆணவம்
தானாகவே ஒடுங்கி விடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வினை செய்யும் வகையறிந்து அதற்கேற்பத் தன்னை வலிமைப் படுத்தித் தற்காப்புஞ் செய்துகொள்ளின் ; பகைவரிடத்துள்ள இறுமாப்புத்தானே நீங்கிவிடும்.



மு. வரதராசனார் உரை

செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக்கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாகவே அழியும்,



G.U. Pope’s Translation

Know thou the way, then do thy part, thyself defend; Thus shall the pride of those that hate thee have an end.

Thirukkural: 878, Knowing the Quality of Hate, Wealth.