குருவிரொட்டி இணைய இதழ்

தன்உயிர்க்கு இன்னாமை தான்அறிவான் – குறள்: 318


தன்உயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோ
மன்உயிர்க்கு இன்னா செயல்.

– குறள்: 318

– அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம்



கலைஞர் உரை

பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன்
அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பிறர் செய்யுந் தீயவை தனக்குத் தீயனவாயிருக்குந் தன்மையைப் பட்டறிகின்றவன்; தான் மட்டும் மற்றவர்கட்குத் தீயவை செய்தல் என்ன கரணியம் (காரணம்) பற்றியோ!



மு. வரதராசனார் உரை

தன் உயிர்க்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், மற்ற உயிர்களுக்கு அத்துன்பங்களைச் செய்தல் என்ன காரணத்தாலோ?



G.U. Pope’s Translation

Whose soul has felt as bitter smart of wrong, how can, He wrongs inflict on ever-living soul of man?

 – Thirukkural: 318, Not doing Evil, Virtues