குருவிரொட்டி இணைய இதழ்

சூழ்வார்கண் ஆக ஒழுகலான் – குறள்: 445


சூழ்வார்கண் ஆக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.
– குறள்: 445

அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள்



கலைஞர் உரை

கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்த கூறும் அறிஞர்
பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மந்திரிமாரைக் கண்ணாகக் கொண்டு அரசியல் நடத்தலால்; அரசன் மந்திர வினைஞரை ஆராய்ந்து அவருட் சிறந்தவரைத் தனக்குத் துணையாகக் கொள்க.



மு. வரதராசனார் உரை

தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரை ஆராய்ந்து நட்புக் கொள்ள வேண்டும்.



G.U. Pope’s Translation

The king, since counsellors are monarch’s eyes, Should counsellors select with counsel wise.

 – Thirukkural: 445, Seeking the Aid of Great Men, Wealth