குருவிரொட்டி இணைய இதழ்

சிறுமையுள் நீங்கிய இன்சொல் – குறள்: 98


சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்
.
– குறள்: 98

– அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம்



கலைஞர் உரை

சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

விளைவாலும் பொருளாலும் குரலாலும் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல் , ஒருவனுக்கு இருமையிலும் இன்பம் விளைவிக்கும் .



மு. வரதராசனார் உரை

பிறர்க்குத் துன்பம் விளைவிக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.



G.U. Pope’s Translation

Sweet kindly words, from meanness free, delight of heart, In world to come and in this world impart.

 – Thirukkural: 98, The Utterance of Pleasant Words, Virtues