குருவிரொட்டி இணைய இதழ்

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் – குறள்: 31


சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
– குறள்: 31

– அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம்



கலைஞர் உரை

சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மறுமையில் விண்ணுலக இன்பத்தையும், வீடுபேற்றையுந் தரும் இம்மையிற் செல்வத்தையுந்தரும்; ஆதலால் மக்களுயிர்க்கு அறத்தைவிடச் சிறந்த ஆக்கம் எதுதான்?



மு. வரதராசனார் உரை

அறம், சிறப்பையும் அளிக்கும்; செல்வத்தையும் அளிக்கும்; ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தைவிட நன்மையானது வேறு யாது?



G.U. Pope’s Translation

It yields distinction, yields prosperity: what gain
Greater than virtue can a living man obtain?

 – Thirukkural: 31, Assertion of the strength of virtue, Virtues