குருவிரொட்டி இணைய இதழ்

பிறன்பொருளாள் பெட்டுஒழுகும் பேதைமை – குறள்: 141


பிறன்பொருளாள் பெட்டுஒழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.

– குறள்: 141

– அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம்



கலைஞர் உரை

பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில்
அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வேறொருவன் உடமையாகவுள்ளவளைக் காதலித் தொழுகும் மடைமை ; நிலவுலகத்தில் அறநூலையும் , பொருள்நூலையுங் கற்றுத் தெளிந்தவரிடம் இல்லை .



மு. வரதராசனார் உரை

பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.



G.U. Pope’s Translation

Who laws of virtue and possession’s rights have known,Indulge no foolish love of her by right another’s own.

 – Thirukkural: 141, Not Coveting Another’s Wife, Virtues