குருவிரொட்டி இணைய இதழ்

பயன்இல பல்லார்முன் சொல்லல் குறள்: 192


பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல
நட்டார்கண் செய்தலின் தீது.
– குறள்: 192

– அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம்



கலைஞர் உரை

பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் பயனற்ற சொற்களை அறிவுடையோர் பலர்முன் சொல்லுதல்; விரும்பப்படாத செயல்களைத் தன் நண்பரிடத்துச் செய்தலினுந் தீயதாம்.



மு. வரதராசனார் உரை

பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லாத செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.



G.U. Pope’s Translation

Words without sense, where many wise men hear, to pour Than deeds to friends ungracious done offendeth more.

 – Thirukkural: 192, Not Speaking Profitless Words, Virtues