குருவிரொட்டி இணைய இதழ்

மனநலம் நன்குஉடையர் ஆயினும் – குறள்: 458


மனநலம் நன்குஉடையர் ஆயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து.
– குறள்: 458

அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள்



கலைஞர் உரை

மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள
கூட்டத்தினரைப் பொறுத்தே வலிமை வந்து வாய்க்கும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மனநன்மையை இயற்கையாகவே மிகுதியாக வுடையராயினும்; அறிவு நிறைந்தோர்க்கு இனநன்மை அரணாகுந் தன்மையுடையது.



மு. வரதராசனார் உரை

மனத்தின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமைவதாகும்.



G.U. Pope’s Translation

To perfect men, though minds right good belong, Yet good companionship is confirmation strong.

 – Thirukkural: 458, Avoiding mean Associations, Wealth