குருவிரொட்டி இணைய இதழ்

கொல்லான் புலாலை மறுத்தானைக் – குறள்: 260


கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும். – குறள்: 260

– அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம்



கலைஞர் உரை

புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக்
கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஓருயிரையுங் கொல்லாதவனாய்ப் புலாலையும் உண்ணாதவனை; எல்லா மக்களும் கைகுவித்து வணங்குவர்.



மு. வரதராசனார் உரை

ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.



G.U. Pope’s Translation

Who slays nought – flesh rejects – his feet before,
All living things with clasped hands adore.

 – Thirukkural: 260, The Renunciation of Flesh, Virtues