குருவிரொட்டி இணைய இதழ்

கரப்புஇலா நெஞ்சின் கடன்அறிவார்- குறள்: 1053


கரப்புஇலா நெஞ்சின் கடன்அறிவார் முன்நின்று
இரப்பும்ஓர் ஏஎர் உடைத்து. – குறள்: 1053

– அதிகாரம்: இரவு, பால்: பொருள்



கலைஞர் உரை

உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில்தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமை யுடையதே யாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

கரத்த லில்லா நெஞ்சினையுடைய கடமையறிவார் முன்நின்று அவரிடத்து இரத்தலும்; இரப்போர்க்கு ஓர் அழகுடையதாம்.



மு. வரதராசனார் உரை

ஒளிப்பு இல்லாத நெஞ்சும் கடமையுணர்ச்சியும் உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.



G.U. Pope’s Translation

The men who nought deny, but know what’s due , before their face To stand as suppliants affords especial grace.

 – Thirukkural: 1053, Mendicancy, Wealth