குருவிரொட்டி இணைய இதழ்

இரத்தலின் இன்னாது மன்ற குறள்: 229


இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல். – குறள்: 229

– அதிகாரம்: ஈகை, பால்: அறம்



கலைஞர் உரை

பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத்
தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும்
கொடுமையானது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தாம் ஈட்டக் கருதிய பொருட்குறையை நிரப்பவேண்டி வறியார்க் கொன்றீயாது தாமே தமித்துண்டல்; திண்ணமாக; இரத்திலினும் தீயதாம்.



மு. வரதராசனார் உரை

பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இரப்பதைவிடத் துன்பமானது.



G.U. Pope’s Translation

They keep their garners full, for self alone the board they spread;- ‘Tis greater pain, be sure, than begging daily bread!

 – Thirukkural: 229, Giving, Virtues