குருவிரொட்டி இணைய இதழ்

இளிவரின் வாழாத மானம் – குறள்: 970


இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.
– குறள்: 970

– அதிகாரம்: மானம், பால்: பொருள்.



கலைஞர் உரை

மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக்
கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தமக்கோ ரிழிவுவந்தவிடத்து அதைத் தாங்காது உடனே உயிர் நீத்த மானியரின் புகழுடம்பை; உலகத்தார் கும்பிட்டு வழுத்துவர்.



மு. வரதராசனார் உரை

தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏத்தி நிற்பார்கள்.



G.U. Pope’s Translation

Who , when dishonour comes, refuse to live, their honoured memory
Will live in worship and applause of all the world for aye!

Thirukkural: 970, Honour, Wealth.