குருவிரொட்டி இணைய இதழ்

ஏவவும் செய்கலான் தான்தேறான் – குறள்: 848


ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்உயிர்
போஒம் அளவும்ஓர் நோய்
. குறள்: 848

– அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு
அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

புல்லறிவாளன் தனக்கு நன்மையானவற்றை அறிவுடையார் செய்யச்சொல்லினுஞ் செய்வதில்லை; தானாகவும் தனக்கு நன்மையானவற்றை அறிந்துகொள்வதில்லை; அத்தகையவன் உயிர் உடம்பினின்று நீங்குமளவும் அவனைத்தாங்கும் உறவினர்க்கெல்லாம் ஒப்பற்ற கொடிய நோயாம்.



மு. வரதராசனார் உரை

தனக்கு நன்மையானவற்றைப் பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்.



G.U. Pope’s Translation

Advised, he heeds not: of himself knows nothing wise; This man’s whole life is all one plague until he dies.

Thirukkural: 848, Ignorance, Wealth.