குருவிரொட்டி இணைய இதழ்

எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் – குறள்: 750

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link
Thiruvalluvar

எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.
– குறள்: 750

– அதிகாரம்:அரண், பால்: பொருள்



கலைஞர் உரை

கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூட
உள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

கோட்டையரணமைப்பு; எனை மாட்சித்து ஆகியக் கண்ணும்; மேற்சொல்லப்பட்ட வுறுப்புக்களெல்லா வற்றோடுங்கூடி எத்துணை மாட்சிமைப் பட்டதாயிருப்பினும்; போர்வினைச் சிறப்பில்லாதவரிடத்துப் பயன்படாததாம்.



மு. வரதராசனார் உரை

எத்தகைய பெருமைகளை உடையதாக இருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரிடத்தில் அரண் பயனில்லாததாகும்.



G.U. Pope’s Translation

Howe’er majestic castled walls may rise,
To craven souls no fortress strength supplies.

 – Thirukkural: 750, The Fortification, Wealth



FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link