குருவிரொட்டி இணைய இதழ்

அறிவினுள் எல்லாம் தலைஎன்ப – குறள்: 203


அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.

– குறள்: 203

– அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம்



கலைஞர் உரை

தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தம்மைப் பகைப்பவர்க்குந் தீமையானவற்றைச் செய்யாது விடுதலை; அறிவுச் செயல்களெல்லாவற்றுள்ளும் தலையாயதென்பர் அறிவுடையோர்.



மு. வரதராசனார் உரை

தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.



G.U. Pope’s Translation

Even to those that hate make no return of ill;
So shalt thou wisdom’s highest law. ‘Tis said, fulfil.

 – Thirukkural: 203, Dread of Evil Deed, Virtues