குருவிரொட்டி இணைய இதழ்

உழவினார் கைம்மடங்கின் இல்லை – குறள்: 1036


உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.
– குறள்: 1036

– அதிகாரம்: உழவு, பால்: பொருள்



கலைஞர் உரை

எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உழவுத்தொழிலைச் செய்வாரின் கை இதைச் செய்யாது ஓய்ந்திருக்குமாயின்; மாந்தராற் சிறப்பாக விரும்பப்படும் பெண்ணின்பத்தையுந் துறந்தோம் என்று பெருமை கூறிக்கொள்ளும் துறவியர்க்கும், அவர் அறத்தில் நிற்பது இல்லாமற்போம்.



மு. வரதராசனார் உரை

உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டு விட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.



G.U. Pope’s Translation

For those who’ve left what all men love no place is found,
When they with folded hands remain who till the ground.

 – Thirukkural: 1036, Agriculture, Wealth