குருவிரொட்டி இணைய இதழ்

செயற்கை அறிந்தக் கடைத்தும் – குறள்: 637


செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.
– குறள்: 637

– அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள்



கலைஞர் உரை

செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நூலறிவால் வினை செய்யுந் திறங்களை அறிந்த விடத்தும்; உலகியலை அறிந்து அதனொடு பொருந்தச் செய்க.



மு. வரதராசனார் உரை

நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளை அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்ய வேண்டும்..



G.U. Pope’s Translation

Though knowing all that books can teach, ‘ tis truest tact To follow common sense of men in act.

 – Thirukkural: 637, The Officeof Minister of State, Wealth