குருவிரொட்டி இணைய இதழ்

செல்விருந்து ஓம்பி வருவிருந்து – குறள்: 86


செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
– குறள்: 86

– அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம்



கலைஞர் உரை

வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி
வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன்
எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தன்னிடம் முந்திவந்த விருந்தினரைப் பேணிவிட்டுப் பின்பு பிந்தி வரும் விருந்தினரையும் எதிர்பார்த்து அவரோடு தானுண்ணக் காத்திருப்பான்; மறுமையில் தேவனாகி விண்ணகத்தாரால் சிறந்த விருந்தினனாக ஏற்றுக்கொள்ளப் படுவான்.



மு. வரதராசனார் உரை

வந்த விருந்தினரைப் போற்றி, இனி வரும் விருந்தினரை எதிர்பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.



G.U. Pope’s Translation

The guest arrived he tends, the coming guest expects to see; To those in heavenly homes that dwell a welcome guest is he.

 – Thirukkural: 86, Cherishing Guests, Virtues