குருவிரொட்டி இணைய இதழ்

பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் – குறள்: 709


பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின். – குறள்: 709

– அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

பார்வையின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள்,
ஒருவரின் கண்களைப் பார்த்தே அவர் மனத்தில் இருப்பது நட்பா,
பகையா என்பதைக் கூறிவிடுவார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அரசரின் பார்வை வேறுபாடுகளை அறியவல்ல அமைச்சரைப் பெற்றால்; அவ்வரசர்க்குப் பிறரோடுள்ள பகைமையையும் நட்பையும் அவர் கண்களே தெரிவிக்கும்.



மு. வரதராசனார் உரை

கண்பார்வையின் வேறுபாடுகளை உணரவல்லவரைப் பெற்றால், (ஒருவனுடைய மனத்தில் உள்ள) பகையையும் நட்பையும் அவனுடைய கண்களே சொல்லிவிடும்.



G.U. Pope’s Translation

The eye speaks out the hate or friendly soul of man;
To those who know the eye’s swift varying moods to scan.

 – Thirukkural: 709, The Knowledge of Indication, Wealth