குருவிரொட்டி இணைய இதழ்

ஒற்றினான் ஒற்றி பொருள்தெரியா – குறள்: 583


ஒற்றினான் ஒற்றி பொருள்தெரியா மன்னவன்
கொற்றம் கொளக்கிடந்தது இல்.
– குறள்: 583

– அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள்



கலைஞர் உரை

நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன்
விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்லை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒற்றரால் எல்லார் செய்திகளையும் மறைவாக அறிந்து வரச் செய்து அவற்றால் விளையும் பயனை ஆராய்ந்தறியா அரசன் ; வெற்றியடையக் கூடிய வேறு வழியில்லை.



மு. வரதராசனார் உரை

ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றி பெறத்தக்க வழிவேறு இல்லை.



G.U. Pope’s Translation

By spies who spies, not weighing things they bring, Nothing can victory give to that unwary king.

 – Thirukkural: 583, Detectives, Wealth