குருவிரொட்டி இணைய இதழ்

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் – குறள்: 683


நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினைஉரைப்பான் பண்பு.
– குறள்: 683

– அதிகாரம்: தூது, பால்: பொருள்



கலைஞர் உரை

வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம்
செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே
வல்லவனாக இருத்தல் வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வேற்படையுடைய வேற்றரசரிடஞ் சென்று தன் அரசனுக்கு வெற்றி தரும் வினையைச் சொல்வானுக்கு இலக்கணமாவது; அரசியல் நூலை அறிந்தவருள் தான் அந்நூலறிவிற் சிறந்தவனாயிருத்தலாம்.



மு. வரதராசனார் உரை

அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்குக் காரணமான செயலைப்பற்றித் தூது உரைப்பவன் திறம், நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.



G.U. Pope’s Translation

Mighty in lore amongst the learned must he be, Midst jav’lin-bearing kings who speaks the words of victory.

 – Thirukkural: 683, The Envoy, Wealth