குருவிரொட்டி இணைய இதழ்

நன்றுஆற்றல் உள்ளும் தவறுஉண்டு – குறள்: 469


நன்றுஆற்றல் உள்ளும் தவறுஉண்டு அவரவர்
பண்புஅறிந்து ஆற்றாக் கடை.
– குறள்: 469

அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள்



கலைஞர் உரை

ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அவரவர் சிறப்புக்குணங்களை ஆராய்ந்தறிந்து அவற்றிற்கேற்பச்செய்யாவிடின் ; வேற்றரசரிடத்து நல்ல ஆம்புடைகளைக் கையாளுமிடத்தும் குற்ற முண்டாம் .



மு. வரதராசனார் உரை

அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவர்க்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால் நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.



G.U. Pope’s Translation

Though well the work be done, yet one mistake is made, To habitudes of various men when no regard is paid.

 – Thirukkural: 469, Acting after due Consideration, Wealth