குருவிரொட்டி இணைய இதழ்

மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் – குறள்: 409


மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்துஇலர் பாடு. – குறள்: 409

அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள்



கலைஞர் உரை

கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

கல்லாதவர் கல்விநிலைமையும் செல்வ நிலைமையும் தொழில் நிலைமையும் அதிகார நிலைமையும் பற்றிய மேல்வகுப்புக்களிற் பிறந்தாராயினும்; கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துப்பாடு இலர் -அந்நால் நிலைமையும் பற்றிய கீழ்வகுப்புக்களிற் பிறந்திருந்துங் கற்றவரைப்போல அத்துணைப் பெருமையுடையவரல்லர்.



மு. வரதராசனார் உரை

கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்வி கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.



G.U. Pope’s Translation

Lower are men unlearned, though noble be their race, Than low-born men adorned with learning’s grace.

 – Thirukkural: 409, Ignorance, Wealth