குருவிரொட்டி இணைய இதழ்

கேடுஅறியா கெட்ட இடத்தும் – குறள்: 736


கேடுஅறியா கெட்ட இடத்தும் வளம்குன்றா
நாடுஎன்ப நாட்டின் தலை.
– குறள்: 736

– அதிகாரம்: நாடு, பால்: பொருள்



கலைஞர் உரை

எந்த வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல்
ஏற்படினும் அதனைச் சீர் செய்யுமளவுக்கு வளங்குன்றா நிலையில் உள்ள நாடுதான், நாடுகளிலேயே தலைசிறந்ததாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

புயல், வெள்ளம், நிலநடுக்கம், எரிமலை முதலிய இயற்கையாலும், பகைவரும் கொள்ளைக்காரருமாகிய மாந்தராலும், கெடுதலறியாததாய்; என்றேனும் ஒரு கால் அரிதிற் கெட்டதாயினும் வளங் குறையாத நாடே; எல்லா நாடுகளுள்ளும் தலையாயதென்று கூறுவர் அறிஞர்.



மு. வரதராசனார் உரை

பகைவரால் கெடுக்கப்படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய், உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலையானது என்று கூறுவர்.



G.U. Pope’s Translation

Chief of all lands is that, where nought disturbs its peace; Or, if invaders come, still yields its rich increase.

 – Thirukkural: 736, The Land, Wealth