குருவிரொட்டி இணைய இதழ்

கருமம் சிதையாமல் கண்ணோட – குறள்: 578


கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்துஇவ் உலகு.
– குறள்: 578

– அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள்



கலைஞர் உரை

கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக
இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நடுநிலையாக முறை செய்யவேண்டிய தம் கடமை தவறாமல் கண்ணோட வல்ல அரசர்க்கு ; இவ்வுலகம் நிலையான உரிமையாகுந் தன்மை யுடையதாம்.



மு. வரதராசனார் உரை

தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்கவல்லவர்க்கு, இவ்வுலகம் உரிமை உடையது.



G.U. Pope’s Translation

Who can benignant smile, yet leave no work undone; By them as very own may all the earth be won.

 – Thirukkural: 578, Benignity, Wealth