குருவிரொட்டி இணைய இதழ்

அறிகொன்று அறியான் எனினும் – குறள்: 638


அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.
– குறள்: 638

– அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள்



கலைஞர் உரை

சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அரசன் தன் அமைச்சர் அறிந்து கூறியவற்றை அழித்துத்தானும் அறியாதவனே யாயினும்; அக்குற்றம் நோக்கி அவனை அவன் விருப்பம் போல் விட்டு விடாது அவனுக்கு நன்மையான வற்றை எடுத்துச் சொல்லுதல் அமைச்சன் கடமையாம்.



மு. வரதராசனார் உரை

அறிவுறுத்துவாரின் அறிவையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறுதல் கடமையாகும்.



G.U. Pope’s Translation

‘Tis duty of the man in place aloud to say
The very truth, though unwise king may cast his words away.

 – Thirukkural: 638, The Officeof Minister of State, Wealth