குருவிரொட்டி இணைய இதழ்

அணிஅன்றோ நாண்உடைமை சான்றோர்க்கு – குறள்: 1014


அணிஅன்றோ நாண்உடைமை சான்றோர்க்கு அஃதுஇன்றேல்
பிணிஅன்றே பீடு நடை.
– குறள்: 1014

– அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு, பெரியவர்களுக்கு அணிகலன் ஆக விளங்கும். அந்த அணிகலன் இல்லாமல் என்னதான் பெருமிதமாக நடைபோட்டாலும், அந்த நடையை ஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத முடியும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அறிவு நிறைந்தோர்க்கு நாணுடைமை ஓர் அணிகலமே; அவ்வணிகல மில்லையாயின் அவரது பெருமித நடை அவருக்கொரு நோயேயாம்.



மு. வரதராசனார் உரை

சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ? அந்த அணிகலம் இல்லையானால், பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ?



G.U. Pope’s Translation

And is not shame an ornament to men of dignity?
Without it step of stately pride is piteous thing to see.

 – Thirukkural: 1014, Shame, Wealth