குருவிரொட்டி இணைய இதழ்

ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை – குறள்: 792


ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.
– குறள்: 792

– அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால்



கலைஞர் உரை

திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவனுடைய குணங்களையும் செயல்களையும் நல்லனவாவென்று பலமுறையும் பலவகையாலும் ஆராய்ந்து பாராது அவரொடு செய்துகொள்ளும் நட்பு;இறுதியில்; தான் சாதற்கேதுவான துன்பத்தை யுண்டாக்கும்.



மு. வரதராசனார் உரை

ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்குக் காரணமான துயரத்தை உண்டாக்கிவிடும்.



G.U. Pope’s Translation

Alliance with the man you have not proved and proved again,
In length of days will give you mortal pain.

 – Thirukkural: 792, Investigation formatting Friendships, Wealth