குருவிரொட்டி இணைய இதழ்

வகுத்தான் வகுத்த வகைஅல்லால் – குறள்: 377


வகுத்தான் வகுத்த வகைஅல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.
– குறள்: 377

– அதிகாரம்: ஊழ், பால்: அறம்



கலைஞர் உரை

வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப்பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஊழ்த் தெய்வம் அவரவர்க்கு இன்பதுன்பம் வகுத்த வகைப்படி யல்லாமல்,கோடிக்கணக்கிற் பொருளை வருந்தி யீட்டியவர்க்கும், அப்பொருளால் இன்பம் நுகர்தல் உண்டாகாது.



மு. வரதராசனார் உரை

ஊழ் ஏற்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கான பொருள்களைச் சேர்த்தவர்க்கும் அவற்றை நுகர முடியாது.



G.U. Pope’s Translation

Save as the ‘sharer’ shares to each in due degree,
To those who millions store enjoyment scarce can be.

Thirukkural: 377, Fate , Virtues