குருவிரொட்டி இணைய இதழ்

வான்நின்று உலகம் வழங்கி வருதலால் – குறள்: 11


வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுஉணரல் பாற்று.
– குறள்: 11

– அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம்



கலைஞர் உரை

உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே
அமிழ்தம் எனப்படுகிறது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மழை வரையறவாய் நின்றுவிடாது தொடர்ந்து பெய்துவர அதனால் உலகம் நடைபெற்று வருதலால்; அம்மழை உலகிற்குச் சாவாமருந்து என்று கருதப்பெறுந்தன்மையது.



மு. வரதராசனார் உரை

மழை பெய்ய உலகம் வாழ்ந்துவருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத் தக்கதாகும்.



G.U. Pope’s Translation

The World its course maintains through life that rain unfailing gives;
Thus rain is known the true ambrosial food of all that lives.

 – Thirukkural: 11, The Excellence of Rain, Virtues