குருவிரொட்டி இணைய இதழ்

உளபோல் முகத்துஎவன் செய்யும் – குறள்: 574


உளபோல் முகத்துஎவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.
– குறள்: 574

– அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள்



கலைஞர் உரை

அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள்
முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப் பயனும் இல்லாதவைகளாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தகுந்த அளவிற்குக் கண்ணோட்ட மில்லாத கண்கள்; முகத்தில் உள்ளன போல் தோன்றுவதல்லது வேறென்ன பயன்தரும்?



மு. வரதராசனார் உரை

தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்?



G.U. Pope’s Translation

The seeming eye to face gives no expressive light, When not with duly meted kindness bright.

 – Thirukkural: 574, Benignity, Wealth