குருவிரொட்டி இணைய இதழ்

தெளிவு இலதனைத் தொடங்கார் – குறள்: 464


தெளிவு இலதனைத் தொடங்கார் இளிவுஎன்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.
– குறள்: 464

அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள்



கலைஞர் உரை

களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தமக்கு இழிவு என்னும் குற்றம் உண்டாதற்கு அஞ்சும் மானியர்; வெற்றியாகும் என்னும் உறுதியில்லாத வினையைச் செய்யத் தொடங்கார்.



மு. வரதராசனார் உரை

இழிவு தருவதாகிய குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் ( இன்ன ஊதியம் பயக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்.



G.U. Pope’s Translation

A work of which the issue is not clear,
Begin not they reproachful scorn who fear.

 – Thirukkural: 464, Acting after due Consideration, Wealth