குருவிரொட்டி இணைய இதழ்

செல்லான் கிழவன் இருப்பின் – குறள்: 1039


செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.
– குறள்: 1039

– அதிகாரம்: உழவு, பால்: பொருள்



கலைஞர் உரை

உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நிலத்திற்குரிய உழவன் நாள்தோறும் சென்று அதற்கு வேண்டியவற்றைச் செய்யாது வீட்டிற் சோம்பியிருப்பின், அவன் நன்செய் அல்லது புன்செய், அவனாற் பேணப்படாத மனைவி போலத் தன்னுள்ளே வெறுத்துப் பின்பு வெளிப்படையாகச் சடைத்துக் கொள்ளும்.



மு. வரதராசனார் உரை

நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால், அந்நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கி விடும்.



G.U. Pope’s Translation

When master from the field aloof hath stood;
Then land will sulk, like wife in angry mood.

 – Thirukkural: 1039, Agriculture, Wealth