குருவிரொட்டி இணைய இதழ்

புறம்கூறி பொய்த்துஉயிர் வாழ்தலின் – குறள்: 183


புறம்கூறி பொய்த்துஉயிர் வாழ்தலின் சாதல்
அறம்கூறும் ஆக்கம் தரும்.
– குறள்: 183

– அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம்



கலைஞர் உரை

கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதை விடச் சாவது நன்று.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் பிறனைக் காணாவிடத்துத் தீதாகக் கூறி அவனைக் கண்டவிடத்து நல்லவனாக நடித்து உயிர் வாழ்தலினும்; அங்ஙனஞ் செய்யாது இறந்து போதல் அவனுக்கு அற நூல்கள் கூறும் ஆக்கத்தைத் தரும்.



மு. வரதராசனார் உரை

புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர்வாழ்தலைவிட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்துவிடுதல் அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.



G.U. Pope’s Translation

‘Tis greater gain of virtuous good for man to die,
Than live to slander absent friend, and falsely praise when nigh.

 – Thirukkural: 183, Not Backbiting, Virtues