குருவிரொட்டி இணைய இதழ்

நல்ஆண்மை என்பது ஒருவற்குத் – குறள்: 1026


நல்ஆண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்ஆண்மை ஆக்கிக் கொளல். – குறள்: 1026

– அதிகாரம்: குடிசெயல்வகை, பால்: பொருள்



கலைஞர் உரை

நல்ல முறையில் ஆளும் திறமை பெற்றவர், தான் பிறந்த குடிக்கே பெருமை சேர்ப்பவராவார்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவனுக்கு நல்ல ஆண்மையென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது; தான் பிறந்த குடியை ஆளுந் தன்மையைத் தனக்கு உண்டாக்கிக் கொள்ளுதல். குடியாளுந் தன்மையாவது குடியிலுள்ள வரை முன்னேற்றித் தன் வயப்படுத்துதல். பேராண்மையினின்று வேறுபடுத்தற்கு ’நல்லாண்மை’ யென்றார். இவ்விரு குறளாலும் குடிசெய்வாரின் தலைமை கூறப்பட்டது..



மு. வரதராசனார் உரை

ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கிக் கொள்வதாகும்.



G.U. Pope’s Translation

Of virtuous manliness the world accords the praise To him who gives his powers, the house from which he sprang to raise.

 – Thirukkural: 1026, The way of Maintaining the Family, Wealth