குருவிரொட்டி இணைய இதழ்

ஈர்ங்கை விதிரார் கயவர் – குறள்: 1077


ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுஉடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு. – குறள்: 1077

– அதிகாரம்: கயமை, பால்: பொருள்



கலைஞர் உரை

கையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக்
கொடுப்பார்களேயல்லாமல், ஈகைக் குணமில்லாத கயவர்கள் ஏழை
எளியோருக்காகத் தமது எச்சில் கையைக்கூட உதற மாட்டார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தம் அலகைப் பெயர்த்தற்கு வளைத்த கையினையுடையா ரல்லாதார்க்கு; கீழ்மக்கள் தாம் உண்ட எச்சிற் கையில் ஒட்டிய இரண்டொரு பருக்கையையும் உதறி வீழ்த்தார்.



மு. வரதராசனார் உரை

கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும்படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும் உதறமாட்டார்.



G.U. Pope’s Translation

From off their moistened hands no clinging grain they shake, Unless to those with clenched fist their jaws who break.

 – Thirukkural: 1077, Baseness, Wealth